Homeசெய்திகள்சென்னைஅமரன் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அமரன் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

-

- Advertisement -

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1.10 கோடி இழப்பீடு கோரி பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குஅமரன் திரைப்படத்தில் தனது எண்ணை பயன்படுத்திய படக்குழு மீது - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தன்னுடயை எண்ணை காண்பித்ததால், பலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டதால் தனக்கு மன உளைச்சல் உண்டானது எனவும். மொபைல் எண் வரும் காட்சியை நீக்கக் கோரி தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தவறை  திருத்தவில்லை என்றும்

ரூ. 1.10 கோடி இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டும். படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும்  என்றும் படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் திடீர் உயர்வு… பயணிகள் அதிர்ச்சி!

MUST READ