spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை: காம்தார் நகர் பிரதான சாலை இனி 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' - தமிழக அரசு

சென்னை: காம்தார் நகர் பிரதான சாலை இனி ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ – தமிழக அரசு

-

- Advertisement -

சென்னை: காம்தார் நகர் பிரதான சாலை இனி 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' - தமிழக அரசுமறைந்த திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எஸ்பிபி -யின் 4 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரை போற்றும் வகையில், அவர் வாழ்ந்த வீதிக்கு SPB நகர் அல்லது வீதி என பெயர் வைக்க அவரது மகன் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ் பி பாலசுப்ரமணியத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும் வேண்டுதலும் இதுவே என்பதனை உங்கள் பார்வைக்கு கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன் என்று தனது மனுவில் அவரது மகன் சரண் தெரிவித்து இருந்தார்.

we-r-hiring

இதை ஏற்று, நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவுக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.

இரவு 1 மணி வரை கனமழை தொடரும் – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்த் திரையுலகுக்கு அவர் ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு, “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MUST READ