Homeசெய்திகள்சென்னைசென்னைவாசிகள் இளப்பாற மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

சென்னைவாசிகள் இளப்பாற மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

-

- Advertisement -

பரபரப்பான வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் சென்னைவாசிகள் இளப்பாற மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு காணக்கூடிய மலர் கண்காட்சியை சென்னையிலேயே கண்டால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் சிறப்பு குறித்து விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.சென்னைவாசிகள் இளப்பாற மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து மலர் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆயிரங்களில் வரத் தொடங்கிய மக்கள் அடுத்தடுத்த வருடங்களில் லட்சங்களாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பம்சங்கள் அதிகரிப்பதால் சென்னைவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ஓவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை கத்திட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் 4-வது சென்னை மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் நடைபெறும் இந்த மலர் கண்காட்சி 2 ம் தேதி தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மலர் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் மலர் கண்காட்சியில் பெட்டுணியா, சால்வியா, செவ்வந்தி ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, சினியா, கோழிக்கொண்டை, வாடாமல்லி சூரியகாந்தி, ஆர்கிட்ஸ், நித்திய கல்யாணி, ஆஸ்டர், டெய்சி போன்ற 50 வகையான மலர்கள், 30 லட்சம் மலர் தொட்டிகள் இடம்பெற்றுள்ளது. இதே போல மலர்கள் அலங்கரிக்கப்பட்ட யானை, மயில், புகைவண்டி, ஆமை, படகு, வண்ணத்துப்பூச்சி, அன்னப்பறவை, நடனமங்கைகள் ஐஸ்கிரீம், ஜீப் போன்ற 20 வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மலர் கண்காட்சியில் பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் இதய வடிவிலான அலங்கார வளைவுகளும் மலர் செடிகளால் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னைவாசிகளின் மற்றொரு பொழுதுபோக்கு தளமாக மலர் கண்காட்சி மாறி உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கவரக்கூடிய வகையில் இந்த மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னைவாசிகளுக்கு கடற்கரை மட்டுமே பொழுதுபோக்கு தளமாக இருக்கிறது. மலர் கண்காட்சி என்றால் ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. இனி சென்னையில் பார்த்து கொள்ளலாம் என்ற அளவிற்கு இந்த மலர் கண்காட்சி சிறப்பாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மலர் கண்காட்சியை காலை மணி முதல் இரவு 6 மணி வரை பொதுமக்கள்  பார்வையிடலாம். மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக கடந்த ஆண்டை போலவே ரூபாய் 200, சிறியவர்களுக்கு ரூபாய் 100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூபாய் 500 கட்டணமாக நிர்ணயாக கப்பட்டுள்ளது.

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MUST READ