Homeசெய்திகள்சென்னைபாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை - அமைச்சர்கள் ஆய்வு

பாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை – அமைச்சர்கள் ஆய்வு

-

- Advertisement -

பாடி மேம்பாலம் அருகே புதிய வண்ண மீன்கள் சந்தை அமைப்பதற்கான இடத்தை  அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை - அமைச்சர்கள் ஆய்வுசென்னை பாடி மேம்பாலம் அருகே வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உலகத்தரம் வாய்ந்த புதிய வண்ண மீன்கள் சந்தை அமைக்கப்பட உள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 160 கடைகளில் வண்ண மீன்கள் விற்பனை சந்தை  அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள்.

பாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை - அமைச்சர்கள் ஆய்வுஅனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் 250 கலர் மீன் உற்பத்தி செயயும் தொழில் நிறுவனங்கள் உள்ளது. அதில் 2500 முதல் மூன்றாயிரம் தொழிலாளர்கள் வரை பயன் பெறுகிறார்கள்.

இந்த தொழிலை தமிழகத்தின் முதன்மை தொழிலாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த  பகுதியில் உலக தரத்தில் கலர் மீன் விற்பனைக்காகவும் மீன் அங்காடி கட்டடம் கட்டுவதற்கும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

4 ஏக்கர் நிலத்தில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  உலகத் தரம் வாய்ந்த கலர் மீன் அங்காடி அமைய இருக்கிறது. இம்மாதம் இறுதியில் கட்டடப் பணிகள் தொடங்கி 15 மாதத்திற்குள் பணிகள் நிறைவடைய உள்ளது என்றார்.

பாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை - அமைச்சர்கள் ஆய்வுசேகர் பாபு பேட்டி

முருகன் மாநாடு தனிப்பட்ட முறையில் கட்சி சார்ந்து இருக்கின்ற மாநாடு  அல்ல  இறைவனை வணங்க விரும்புபவர்கள் பங்கேற்கும் மாநாடு. முருகனை வழிப்படுகிறவர்கள் பார்க்க வரலாம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு  மக்களுடைய தேவை என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்றது போல மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த திட்டங்கள் அமைப்பதற்கு துறையினுடைய செயலாளர்  துரை சார்ந்த அதிகாரிகள் பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் அதற்குண்டான ஆலோசனை பெறுவதற்கு டெண்டர் கூறப்பட்டிருக்கிறது.

ஆலோசனைகள் இறுதி வடிவம் பெற்று பிறகு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று  மக்களுக்கு எது பயன்படுகிறது அந்த திட்டத்தை நிச்சயமாக கொண்டு வருவோம்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு ஒன்றிய அரசு மேற்கொள்ளப்பட வேண்டிய பணி. தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களை போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்றார்.

MUST READ