தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்
தமிழ்நாட்டில் சென்னை சென்டரல், எழும்பூர், கடற்கரை இரயில் நிலையத்திற்கு அடுத்தது வளர்ந்து வரும் பெரிய இரயில் நிலையம் தாம்பரம்.
இந்த இரயில் நிலையம் 1931-ம் ஆண்டு மின்சார மயமாக்கப்பட்டது. தினமும் சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்திற்கும் இடையே 160 ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. அதுபோல் தாம்பரத்திற்கும் செங்கல்பட்டுக்கும் இடையே 70 இரயில்ளும், தாம்பரத்திற்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையே 16 இரயில்களும் இயக்கப்படுகின்றன.

மேலும், தமிழகத்தில் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் இரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்கிறது. அதேபோன்று ஹவுரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 52 இரயில்களும் தாம்பரத்தில் நின்று செல்வதால் அந்த இரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிவரும்.
இந்த இரயில் நிலையத்தில் உள்ள 9 நடைமேடைகளில் 1 முதல் 4 நடைமேடைகள் (பிளாட்பாரங்கள்) செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை இடையே புறநகா் இரயில் பயணிகள் பயன்பாட்டிற்கும் 5 முதல் 9 வரையிலான நடைமேடைகள் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூா் இடையேயான புறநகா் இரயிலை பயன்படுத்தும் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட தூரம் செல்லும் விரைவு இரயில் பயணிகள் பயன்படுத்து கின்றனர்.
தினமும் சுமார் 3½ லட்சம் பயணிகள் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை ஆகிறது. இதில் பெரும்பகுதி புறநகா் இரயிலை பயன்படுத்தும் மக்களிடம் இருந்து வருகிறது.
சென்னையில் அதிக வருவாய் ஈட்டும் நிலையமாக சென்ட்ரலுக்கு அடுத்தது தாம்பரம் உள்ளது. இந்த இரயில் நிலையத்தை சுற்றிலும் ஏராளமான புதிய நகர்களும், வேளச்சேரி, மேடவாக்கம் போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளும் இருப்பதால் இங்கிருந்து வெளியூா்களுக்கு செல்லும் பயணிகள் அதிகம் வருகின்றனா்.
அதேபோல் சென்னையில் அலுவலகங்களுக்கு செல்பவா்களும் அதிகளவில் இங்கிருந்து புறப்படும் மின்சார இரயில்களைப் பயன்படுத்துகின்றனா். இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களுக்கு, வயதானவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என்றால் இல்லை என்றே சொல்கிறார்கள்.
இதுகுறித்து பானுமதி என்பவரிடம் கேட்டபோது, என்னைப் போன்ற வயதானவர்களுக்கு தாம்பரம் இரயில் நிலையத்தில் வசதிகள் சுத்தமாக இல்லை. இங்குள்ள விரைவு இரயில் நின்று செல்லும் நடைமேடைகளுக்கு படிக்கட்டு வசதிகள், லிப்ட் வசதிகள் எதுவும் இல்லை. அதனால் கையில் எடுத்து வரும் பேக்குகள், பெட்டிகள், உடைமைகளை கொண்டு செல்ல சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் என்ற பயணியிடம் பேசும்போது, தாம்பரம் நிலையத்தில் முதியோர்களுக்கு ஓாிரு பேட்டாி காா் மட்டுமே இருக்கின்றன. அதிலும் நாங்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை ஏற்ற மறுக்கின்றனர். அதனால் பலா் பேட்டாி காா்களை விரும்புவதில்லை. அதனால் இரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எந்தெந்த இரயில்கள் எங்கே நிற்கும் என்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும், வெயில் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக அதிகம் பேர் தெரிவித்தனர். தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.