Homeசெய்திகள்சென்னைமெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பரிசா!

மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பரிசா!

-

- Advertisement -

மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பரிசா! – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அதிகம் பயணம் செய்யும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி 30 பயனாளிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். கடந்த 11 மாதங்களில் 110 பயணிகளுக்கு மொத்தம் ரூபாய் 5 லட்சத்து 500-க்கான பரிசு பொருள் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் அதிகமுறை பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கள் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று(16.03.2023) நடந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி 30 பயனாளிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

பயணிகளுக்கு பரிவு பொருட்களை வழங்கிய பின்னர் நிகழ்ச்சியில் ராஜேஷ் சதுர்வேதி கூறியதாவது,

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருள் மற்றும் 30 பேருக்கு தங்கள் விருப்பம்போல பயணம் செய்ய பயண அட்டை என்ற அடிப்படையில் கடந்த 11 மாதங்களில் 110 பயணிகளுக்கு என மொத்தம் ரூபாய் 5,00,500-க்கான பரிசு பொருள் வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோல, பயண அட்டை வாங்கி அதில் குறைந்தபட்சத் தொகையான ரூபாய் 500-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளை மாதம் அதிர்ஷ்டக்குலுக்கல் மூலம் தேர்வு செய்துப்பட்டு கடந்த 11 மாதங்களில் 110 பயணிகளுக்கு ரூபாய் 3,79,000 ஆயிரத்துக்கான பரிசுபொருள் வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 11 மாதங்களில் மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்திய இந்த அதிர்ஷ்டக்குலுக்கல் மூலம் அதுவரை 330 பயணிகளுக்கு ரூபாய் 11 லட்சம் மதிப்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது என்று கூறினார்.

MUST READ