- Advertisement -
சென்னை கிண்டியிலுள்ள காந்திமண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி மண்டத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டனர்.

“காந்தியும் உலக அமைதியும்” என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியை முதலமைச்சரும் ஆளுநரும் கூட்டாக திறந்து வைத்தனர்.

மேலும், அந்த கண்காட்சியில் கண்களை கவரும் வகையில் புத்தகங்களை வைத்து காந்தியடிகளின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி ஒரு வாரத்திற்கு மேல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
காந்தியடிகளின் 90 அரிய புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.


