Homeசெய்திகள்சென்னைஒரு நாளைக்கு ₹100 தான்- பயன்பாட்டுக்கு வந்த 'முதல்வர் படைப்பகம்'

ஒரு நாளைக்கு ₹100 தான்- பயன்பாட்டுக்கு வந்த ‘முதல்வர் படைப்பகம்’

-

- Advertisement -

 

ஒரு நாளைக்கு ₹100 தான். சென்னை கொளத்தூரில் ” பயன்பாட்டுக்கு வந்த ‘முதல்வர் படைப்பகம்’.

ஒரு நாளைக்கு ₹100 தான்- பயன்பாட்டுக்கு வந்த 'முதல்வர் படைப்பகம்'

பயனாளிகள் மகிழ்ச்சி! கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் இணைந்து ₹2.85 கோடி செலவில் உருவாக்கியுள்ள ‘Co-working Space’ மற்றும் மாணவர்களுக்கான ‘கல்வி மையத்தை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மாணவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் படிக்கும் வகையில் அமைதியான சூழலும், நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணையதள வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 51 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் இவ்விடம் அமையப் பெற்றுள்ளது.

போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்கிட இயலாத பெண்களுக்கும்,ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் 38 நபர்கள் முறையாக அமர்ந்து பணி செய்வதற்கான நல்ல அமைதிான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி Wifi, பார்க்கிங், ஏ.சி,  வசதிகளுடன் 3 கலந்தாய்வு கூடங்களும், அதில் இரண்டு கூடத்தில் தலா 4 நபர்களும், ஒரு கூடத்தில் 6 நபர்களும் அமர்ந்து கலந்தாலோசனை மேற்கொள்ளும் வகையிலும். உணவு அருந்தி இளைப்பாறுவதற்காக ஒரு தளமும், என மொத்தம் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலேயே முதல் முறையாக கொளத்தூரில் தமிழ்நாடு அரசின் சார்பில் இத்தகைய சிறப்பு வாய்ந்த “முதல்வர் படைப்பகம்” உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்திற்கு அரை நாளைக்கு ₹50-ம், ஒரு நாளைக்கு ₹100-ம் மாதத்திற்கு ₹2,500-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் gccservices.chennaicorporation.gov.in/muthalvarpadai என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இனி, வேலைக்கு ஆள் எடுக்கப்போவதே ஏஐ தொழில்நுட்பம்தான்: உங்கள் ரெஸ்யூமை மாற்றுவது எப்படி?

MUST READ