spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபுறநகர் ரயில்கள் ரத்து: கூடுதலாக 70 மாநகர பேருந்துகள் இயக்கம்

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதலாக 70 மாநகர பேருந்துகள் இயக்கம்

-

- Advertisement -

சென்னை கடற்கரை -தாம்பரம் புறநகர் ரயில் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

we-r-hiring

இந்த நிலையில் பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகர், பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 

 

MUST READ