தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்களின் படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆகாஷ் பாஸ்கரன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி, தனுஷின் இட்லி கடை, சிம்புவின் STR 49 ஆகிய படங்களை தயாரிக்கிறார். இது தவிர அதர்வாவின் இதயம் முரளி படத்தை தானே தயாரித்து, இயக்குகிறார் ஆகாஷ் பாஸ்கரன். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி கவின்கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே. ரங்கநாதனின் மூன்றாவது மகள் தாரணியை திருமணம் செய்து கொண்ட ஆகாஷ் பாஸ்கரன், தற்போது கவின்கேர் நிறுவனத்தையும், மூன் பேக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை (மே 16) முதல் சென்னை தேனாம்பேட்டியில் உள்ள கேபிஎன் தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ரெய்டுக்கான காரணம் என்னவென்றால், ஆகாஷ் பாஸ்கரன் சுமார் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் மூன்று படங்களை தயாரித்து வருகிறார். அதாவது 200 கோடியில் பராசக்தி, 100 கோடியில் இட்லி கடை, 150 கோடியில் STR 49 ஆகிய படங்களை தயாரிக்கிறாராம். இது தவிர இதயம் முரளி படத்தையும் தயாரித்து இயக்கி வருவது ரெய்டுக்கான முக்கியமான காரணம் என சொல்லப்படுகிறது.