மாரி செல்வராஜ் தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை வாழை படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தன்னுடைய
வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து வாழை படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ள நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப் பிரபலங்கள் மற்றும் இயக்குநர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ,இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள பதிவில், மாரி செல்வராஜினுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் நீண்ட நாளுக்குப்பிறகு வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருப்பதாகவும், அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம்
நிரூபித்திருக்கிறார் என பாராட்டியுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாரி செல்வராஜுக்கு தன்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் என தெரிவித்துள்ளார்.