நடிகை சாய் பல்லவி காமெடி ரோலில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த படத்தில் இவர் நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை இவருக்கு சேகரித்து தந்தது. அதுமட்டுமில்லாமல் உடலை வளைத்து நெளித்து ஆடும் இவருடைய நடனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தமிழில் மாரி 2, NGK போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதன்படி நாக சைதன்யாவின் தண்டேல், ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகும் ராமாயணம் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கன்னட படம் ஒன்றில் இவர் நடிக்கப் போவதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி, சமீபத்தில் நடந்த பேட்டியில் காமெடி ரோலில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதாவது வித்தியாசமான முழு நீள காமெடி கதாபாத்திரம் இருக்க வேண்டும் எனவும் அத்தகைய வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனடியாக ஒப்புக்கொள்வேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.