spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை ஸ்ரீதேவியை கௌரவப்படுத்திய அரசாங்கம்...

நடிகை ஸ்ரீதேவியை கௌரவப்படுத்திய அரசாங்கம்…

-

- Advertisement -
இந்திய திரையுலகில் ஒரு காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாக உலா வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இந்திய மொழிகள் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் ஒரு சில படங்களில் ஸ்ரீ தேவி நடித்துள்ளார். 80-ஸ் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீ தேவி 2018-ம் ஆண்டு துபாயில் கணவருடன் இருந்தபோது, மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களான – ஜான்வி கபூரும், குஷி கபூரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகின்றனர். மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவாக மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட, லோகண்ட்வாலா என்ற பகுதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்பகுதி இனிமேல் ‘ஸ்ரீதேவி கபூர் சவுக்’ என அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீதேவியை கௌரவப்படுத்தும் நோக்கத்தில் அப்பகுதி மக்கள் இந்த கோரிக்கையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

MUST READ