போடா போடி, நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் அடுத்ததாக பிரதிப் ரங்க நாதனை வைத்து எல்ஐசி (LIC-LIFE INSURANCE CORPORATION) எனும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் சம்பந்தமாக விக்னேஷ் சிவன் மீது, எஸ் எஸ் குமரன் வழக்கு பதிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. தற்போது எல்ஐசி படத்தில் மீண்டும் விக்னேஷ் அவர்களுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது தயாரிப்பாளர்கள் லலித் குமார் எல் ஐ சி படம் தயாரிப்பதற்காக 65 இல் இருந்து 70 கோடி ரூபாய் வரை பட்ஜெட் ஒதுக்கி இருக்கிறாராம். 70 கோடி ரூபாய்க்குள் எல்ஐசி படத்தை முடிப்பதற்காக ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளதாம் . அதன்படி இப்படத்தின் பட்ஜெட் 70 கோடிக்கு மேல் தாண்டினால் இயக்குனர் விக்னேஷ் சிவனே மேற்கொண்டு வரும் பணத்தை போட்டு படத்தை முடிக்க வேண்டுமாம். இவ்வாறு தான் அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம். எல்ஐசி படம் தொடங்கிய உடனே விக்னேஷ் சிவனுக்கு சிக்கல் உருவாகியது தற்போது மீண்டும் ஒரு சிக்கலா? என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.