Homeசெய்திகள்சினிமாவசூலிலும் மாஸ் காட்டிய 'ஆடு ஜீவிதம்'.... 25 நாட்களில் இத்தனை கோடியா?

வசூலிலும் மாஸ் காட்டிய ‘ஆடு ஜீவிதம்’…. 25 நாட்களில் இத்தனை கோடியா?

-

மலையாளத் திரைப்படங்கள் சமீபத்தில் தரமான வசூலை பெற்று வருகின்றன. மஞ்சும்மெல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்து அசாத்திய சாதனை படைத்தன. வசூலிலும் மாஸ் காட்டிய 'ஆடு ஜீவிதம்'.... 25 நாட்களில் இத்தனை கோடியா?அந்த வகையில் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 28 அன்று வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வசூலிலும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதன்படி ஏற்கனவே இந்த படம் குறுகிய நாட்களில் 100 கோடியை வசூலித்த நிலையில் தற்போது வெளியான 25 நாட்களில் 150 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. எனவே இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில் எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்னும் நாவலை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் பிளஸ்ஸி. இதில் பிரித்விராஜுடன் இணைந்து அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.வசூலிலும் மாஸ் காட்டிய 'ஆடு ஜீவிதம்'.... 25 நாட்களில் இத்தனை கோடியா?ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். சுனில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பிழைப்பு தேடி வெளிநாட்டுக்கு செல்லும் இளைஞன் படும் கஷ்டத்தை மிக நேர்த்தியாக சொல்லி இருந்த இப்படத்தில் நடிகர் பிரித்விராஜின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ