Homeசெய்திகள்சினிமாதனது மேனேஜர் மீது கடுங்கோபத்தில் நடிகர் அஜித்..... ஏன் தெரியுமா?

தனது மேனேஜர் மீது கடுங்கோபத்தில் நடிகர் அஜித்….. ஏன் தெரியுமா?

-

நடிகர் அஜித், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் , ரெஜினா மற்றும் பலர் நடிக்கின்றனர். தனது மேனேஜர் மீது கடுங்கோபத்தில் நடிகர் அஜித்..... ஏன் தெரியுமா?இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். எனவே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் அஜித்தின் ஏகே 63 திரைப்படமும் தள்ளிப் போகிறது.தனது மேனேஜர் மீது கடுங்கோபத்தில் நடிகர் அஜித்..... ஏன் தெரியுமா?

இந்நிலையில் நடிகர் அஜித் தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா பரிந்துரை செய்ததால் தான் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அஜித். ஆனால் விடாமுயற்சி படத்தை இழுபறியில் வைத்துவிட்டு மகிழ் திருமேனி கவலையே இல்லாமல் இருப்பது தான் நடிகர் அஜித், மேனேஜர் மீது கோபமாக இருப்பதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அஜித் ரசிகர்களும் விடாமுயற்சி திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கும் சூழலில் இத்திரைப்படம் தள்ளிப் போகும் தகவல் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ