spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவேறு ஒருவர் நடித்திருந்தால் மலைக்கோட்டை வாலிபன் வெற்றி பெற்றிருக்கும்... பிரபல வில்லன் நடிகர் சர்ச்சை பேச்சு...

வேறு ஒருவர் நடித்திருந்தால் மலைக்கோட்டை வாலிபன் வெற்றி பெற்றிருக்கும்… பிரபல வில்லன் நடிகர் சர்ச்சை பேச்சு…

-

- Advertisement -
அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற மலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என பிரபல வில்லன் நடிகர் தெரிவித்துள்ளார்.

மலையாள திரை ரசிகர்களாலும், திரை உலகினராலும் லாலேட்டன் என்று கொண்டாடப்படும் நாயகன் மோகன்லால். 0-களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மோகன்லால் இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். அப்படத்தின் மோகன்லாலின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படம் மலையாளத்திலும் நல்ல வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் மோகன்லால் கமிட்டாகி நடித்து வருகிறார்.

we-r-hiring
இறுதியாக மோகன்லால் நடிப்பில் நேரு திரைப்படம் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதையடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான மற்றொரு திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டைரிஸ் பட இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கி இருக்கிறார். இதில் மோகன்லாலுடன் சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது.

இது தொடர்பாக பேசிய பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி, திரையுலகில் மோகன்லாலுக்கு எதிராக பலர் செயல்படுகின்றனர். அரசியலுடன் அவரை தொடர்புபடுத்தி, தேவையில்லாமல் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை கொடுத்தனர். படத்தில் மோகன்லால் இல்லாமல் வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும், படம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என தெரிவித்தார். மேலும், ரசிகர்களுக்கு புதுமைகளை வரவேற்கும் எண்ணம் குறைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

MUST READ