Homeசெய்திகள்சினிமாபிரசாந்தை வில்லனாக நடிக்க விட மாட்டேன்... தந்தை தியாகராஜன் உறுதி...

பிரசாந்தை வில்லனாக நடிக்க விட மாட்டேன்… தந்தை தியாகராஜன் உறுதி…

-

நடிகர் பிரசாந்தை வில்லனாக நடிக்க விட மாட்டேன் என்று அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோலிவுட் திரையுலகில் ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். 1990-ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் நாயகனாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், கிழக்கே வரும் பாட்டு, ராசா மகன், கண்மணி உள்பட பல காதல் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் வெற்றிக்காக போராடிகக் கொண்டிருந்த நேரத்தில், அடுத்தடுத்த படங்களின் மூலம் வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் பிரஷாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம், விரும்புகிறேன் தான். இதைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தாலும் அவை கலவையான விமர்சனங்களை பெற்றன. பிரசாந்த் தற்போது, அந்தகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், அந்தகன் படம் கிடப்பில் இருப்பது தொடர்பாக பிரசாந்தின் தந்தை தியாகராஜனிடன் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், படத்தின் பின்னணி வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும், கோட் படத்தில் பிரசாந்தின் கதாபாத்திரம் குறித்து பேசிய அவர், பிரசாந்தை ஒரு போதும் வில்லன் வேடத்தில் நடிக்க விட மாட்டேன், கதாநாயகனாக மட்டுமே நடிக்க வைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ