spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசின்னதிரை நடிகை மரணம்…குடும்பத்தாரிடம்  போலீசார் விசாரணை…

சின்னதிரை நடிகை மரணம்…குடும்பத்தாரிடம்  போலீசார் விசாரணை…

-

- Advertisement -

சின்னத்திரை நடிகை ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை. குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சின்னதிரை நடிகை மரணம்…குடும்பத்தாரிடம்  போலீசார் விசாரணை…

சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்தவர் ராஜேஸ்வரி(வயது 39).  இவரது கணவர் சதீஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

we-r-hiring

இந்த தம்பதிக்கு ஒரு மகன் ,மகள் உள்ளனர். பிராட்வேயில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்த ராஜேஸ்வரி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த எட்டாம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் நூறுக்கும் மேற்பட்ட ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி கீழே விழுந்தார்.

அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இன்று காலை ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ராஜேஸ்வரியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கல்லூரி மாணவி லாரி மோதி பலி!!

MUST READ