Homeசெய்திகள்சினிமாசினேகாவின் உடை குறித்து பத்திரிகையில் விமர்சனம்... அதிரடி முடிவு எடுத்த நடிகை... சினேகாவின் உடை குறித்து பத்திரிகையில் விமர்சனம்… அதிரடி முடிவு எடுத்த நடிகை…
- Advertisement -

கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என அன்புடன் கொண்டாடப்படுபவர் சினேகா. 90-களில் தொடங்கி இன்று வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!க் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலும், சினேகாவின் நடிப்பு பேசப்படும். கடந்த 2012-ம் ஆண்டு நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்து அவர்களின் காதல் தொடங்கியது. திரையுலகில் தற்போது நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சினேகா – பிரசன்னா தம்பதி. இந்த தம்பதிக்கு தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர். நடிகை சினேகா நடிப்பில் வெளியான இறுதி திரைப்படம் ஷாட் பூட் த்ரீ. இப்படத்தில் வெங்கட் பிரபு நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டு பக்கங்களிலும் இவருவரும் ஜொலித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆடை குறித்து அண்மையில் நடிகை சினேகா பேசியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. ஒரு முறை பிரபல பத்திரிகையில் சினேகா அடிக்கடி ஒரே உடையை திரும்ப திரும்ப உடுத்துவதாக குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்தார். இதனால், தான் ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணிவதில்லை, அதை நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அளித்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.