Homeசெய்திகள்சினிமாமீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை திரிஷா!

மீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை திரிஷா!

-

- Advertisement -

நடிகை திரிஷா ஆரம்பத்தில் 1999இல் வெளியான ஜோடி திரைப்படத்தில் நடிகர் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார். மீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை திரிஷா!அதைத்தொடர்ந்து அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து திருப்பாச்சி, ஆறு, சாமி, கிரீடம், விண்ணைத்தாண்டி வருவாயா என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இருப்பினும் சில புதிய நடிகைகளின் வரவால் சில காலங்கள் திரிஷாவின் மவுசு குறைந்துவிட்டது. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் திரிஷாவின் ஸ்டார் அந்தஸ்தை திரும்பவும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து லியோ,விடாமுயற்சி என மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் திரிஷா. அதே சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிருந்தா எனும் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வரும் திரிஷா ஐடெண்டிட்டி, விஷ்வம்பரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.மீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை திரிஷா! அடுத்ததாக இவர் பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் ஸ்பிரிட் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி, அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க இருக்கிறார். இதில் நடிகர் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை திரிஷா வில்லியாக நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே நடிகை திரிஷா தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ