செல்வாக்கு படைத்த ஆலியா பட்… டைம் இதழின் பட்டியலில் இடம்பிடிப்பு…
- Advertisement -

பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். தனது 19 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய அலியா பட், இன்று இந்தி திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் பிரபலமான கபூர் குடும்பத்திற்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த ஆண்டு இறுதியிலேயே தாயானார்.

பெண் குழந்தைக்கு தாயான அலியா பட், தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். 2021ஆம் ஆண்டு வெளியான ‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காக தன் முதல் தேசிய விருதை அவர் பெற்றார். குடும்பம் , வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வரும் அலியா பட், சினிமா வாழ்வில் கடுமையாக ட்ரோல்களை சம்பாதித்த நிலையில், தற்போது பலருக்கு இன்ஸ்பிரேஷனாக பார்க்கப்பட்டு வருகிறார். சினிமா மட்டுமன்றி, ஃபேஷன் துறையிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், டைம் இதழ் வெளியிட்ட 2024-ம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து வௌியாகும் இந்த இதழ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். இந்த ஆண்டுக்கான கலைஞர்கள் பட்டியலில் அலியா பட், மற்றும் பாலிவுட் இயக்குநர் தேவ் பட்டேல் ஆகிய இருவரும் இடம் பிடித்துள்ளனர்.