அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா தி ரூல் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமாரன் இயக்கி கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். முதல் பாகமாக வெளியே வந்த இந்த படம் பயன் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா பகத் பாஸில் உள்ளிட்டோர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்தனர். செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் ரூபாய் 500 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
புஷ்பா முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. மைத்திரி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது அதாவது முதல் பாகம் 500 கோடியை வசூலித்த நிலையில் இந்த இரண்டாம் பாகம் 1000 கோடியை நிச்சயம் வசூலித்து சாதனை படைக்கும் என்று பலர் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.