அல்லு அர்ஜுனின் 22 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான புஷ்பா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இதன் வெற்றிக்குப் பிறகு தற்போது புஷ்பா 2 இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் தனது 22 ஆவது படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இவர்களின் கூட்டணி ஏற்கனவே ஜூலாயி, சன் ஆப் சத்யமூர்த்தி, அல வைகுந்தபுரம்லூ உள்ளிட்ட வெற்றி படங்களை தந்துள்ளது.
தற்போது மீண்டும் நான்காவது முறையாக ‘AA22’ படத்தில் இணைய இருக்கிறது.
இந்த புதிய படத்தை ஹர்சிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.இது தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.