சூர்யாவின் ‘கருப்பு’ மற்றும் ‘சூர்யா 47’ படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதாவது ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்திலும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகி வரும் இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை நடிகர் சூர்யா முழுமையாக முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் 2026 ஜனவரி மாதம் 23ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் பேச்சு அடிபடுகிறது.
அதே சமயம் சூர்யா தனது 46வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இன்னும் பத்து நாட்கள் மட்டும் இதன் படப்பிடிப்புகள் மீதம் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கிடையில் சூர்யா, ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். தற்காலிகமாக ‘சூர்யா 47’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூர்யா போலிஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெறும் எனவும் பூஜைக்கு பின்னர் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


