Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியால் கண்ணீர்விட்டு அழுத தொகுப்பாளினி மணிமேகலை...

விஜய் ஆண்டனியால் கண்ணீர்விட்டு அழுத தொகுப்பாளினி மணிமேகலை…

-

கோலிவுட் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்து, 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் இருக்கிறார். இசை அமைப்பாளராக கோலிவுட்டில் கோட்டை கட்டிய விஜய் ஆண்டனியின் கவனம், நடிப்பின் பக்கம் திரும்பியது. நான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், யமன், அண்ணாதுரை, கொலைகாரன், கொடியின் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர், வள்ளி மயில், அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. இதற்கிடையே, அவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரோமியோ. விநாயகர் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனியை பிரபல தொகுப்பாளினி மணிமேகலை பேட்டி எடுத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், காலில் அடிபட்டபோது நான் நடக்கவே முடியாது என்று தெரிவித்தனர். ஆனால், உங்கள் வீடியோ தான் எனக்கு ஆறுதலாக இருந்தது என்றும், உங்களை பார்த்து நான் வியந்துவிட்டேன் என்றும் மணிமேகலை தெரிவித்துள்ளார். இப்போது நான் இருக்க காரணமும் நீங்கள் தான் சார் என்று மணிமேகலை கதறி அழுதார். உடனே விஜய் ஆண்டனி அவரது கைகளை பிடித்துக்கொண்டு, வாழ்க்கை பயணம் என்பது கெசுவிட மிகச்சிறியது என ஆறுதல் தெரிவித்தார்.

MUST READ