நடிகர் ஜிவி பிரகாஷ் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் இசையமைப்பாளராகவும் பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அடியே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து டியர், கிங்ஸ்டன், ரிபெல் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் , பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் பான் இந்திய அளவில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன.
ஜிவி பிரகாஷ் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் இணைந்து கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் என்ற இந்தி படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இயக்குனர் அனுராக் காஷ்யப் பிளாக் ஃப்ரைடே, தி லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். அதை தொடர்ந்து வெளியான லியோ படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்தார். மேலும் ஜிவி பிரகாஷின் புதிய படத்தின் மூலம் அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.