Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அல்லு அர்ஜுனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

-

- Advertisement -

அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அல்லு அர்ஜுனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருந்த புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. எனவே நடிகர் அல்லு அர்ஜுன், அதற்கு முந்தைய நாள் (டிசம்பர் 14) இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க வந்தார். அப்போது அல்லு அர்ஜுனைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்ட நிலையில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் ஒருவர் பலியானார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கில் திரையரங்க உரிமையாளர் உட்பட மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அல்லு அர்ஜுனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அல்லு அர்ஜுன் வெளியில் வந்த பிறகுதான் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். அதற்குள் தற்போது புதிய சிக்கல் எழுந்திருப்பது மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

MUST READ