Homeசெய்திகள்சினிமாஆன்மீகத்தையும், சினிமாவையும் தனித்தனியாக பார்க்கக் கூடியவர்..... ரஜினி குறித்து ஏ.ஆர். ரகுமான்!

ஆன்மீகத்தையும், சினிமாவையும் தனித்தனியாக பார்க்கக் கூடியவர்….. ரஜினி குறித்து ஏ.ஆர். ரகுமான்!

-

ஆன்மீகத்தையும், சினிமாவையும் தனித்தனியாக பார்க்கக் கூடியவர்..... ரஜினி குறித்து ஏ ஆர் ரகுமான்!ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பாவை விமர்சனம் செய்பவர்களுக்கு தனது அப்பா சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று கூறினார்.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சங்கி என்பது இழிவான வார்த்தை என்பது போல்
அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை பலரும் கமெண்ட் செய்து வந்தனர். ஆன்மீகத்தையும், சினிமாவையும் தனித்தனியாக பார்க்கக் கூடியவர்..... ரஜினி குறித்து ஏ ஆர் ரகுமான்!இதற்கு நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த பேட்டியில் ஐஸ்வர்யா ‘சங்கி என்பதை கெட்ட வார்த்தை போல் கூறவில்லை. தன் தந்தை ஆன்மீகத்தை நேசிக்கக் கூடியவர் என்ற அர்த்தத்தில் தான் கூறினார்’ என்று பேசியிருந்தார். இருந்த போதிலும் இந்த விவகாரம் இன்னும் முடிந்த பாடில்லை. தற்போது லால் சலாம் படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான், “ரஜினி மிகப்பெரிய ஸ்டைல் ஐகான். கருப்பாக இருப்பவர் சூப்பர் ஸ்டாராக முடியும் என்பதை நிரூபித்தவர். சினிமாவையும் ஆன்மீகத்தையும் தனித்தனியாக பார்க்கக் கூடியவர். மேலும் ரஜினி நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர்” என்று இந்த விவகாரத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிக்காக குரல் கொடுத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

MUST READ