spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅசோக் செல்வன், வசந்த் ரவி கூட்டணியின் 'பொன் ஒன்று கண்டேன்'.......நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு!

அசோக் செல்வன், வசந்த் ரவி கூட்டணியின் ‘பொன் ஒன்று கண்டேன்’…….நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு!

-

- Advertisement -

அசோக் செல்வன் போர் தொழில் படத்தின் வெற்றிக்கு பிறகு சபாநாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அசோக் செல்வன், வசந்த் ரவி கூட்டணியின் 'பொன் ஒன்று கண்டேன்'.......நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு! இது ஒரு பக்கம் இருக்க நடிகர் வசந்த் ரவி, ஜெயிலர் படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்த வருகிறார். இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பொன் ஒன்று கண்டேன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை கடந்த 2005-ல் வெளியான கண்ட நாள் முதல் எனும் படத்தை இயக்கியிருந்த பிரியா.V இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முக்கோண காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்தது.அசோக் செல்வன், வசந்த் ரவி கூட்டணியின் 'பொன் ஒன்று கண்டேன்'.......நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு! அதைத் தொடர்ந்து இப்படம் நேரடியாக ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ