spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கு நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கும் அட்லீ

தெலுங்கு நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கும் அட்லீ

-

- Advertisement -
பிரபல தெலுங்கு நிறுவனத்துடன் இயக்குநர் அட்லீ புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இருந்து இன்று ஆங்கில திரையுலகம் வரை சென்று கொண்டிருக்கும் முன்னணி இயக்குநர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு வெளியான தெறி படம் ஹிட் படமாக அமைந்தது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே மெர்சல் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ.

we-r-hiring
இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் சுமார் ஆயிரத்து 200 கோடி வசூல் செய்தது. இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவரும், அவரது மனைவி ப்ரியாவும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெறி படத்தின் இந்தி ரீமேக்கை ப்ரியா அட்லீ தயாரிக்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸூடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில், அதிகளவில் ஊதியம் பெற்றுள்ளாராம். மேலும், இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், ஷாருக்கான் மற்றும் அல்லு அர்ஜூனை நடிக்க வைப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ