Homeசெய்திகள்சினிமாபாலிவுட்டில் அடிவாரத்தை பலப்படுத்தும் அட்லீ

பாலிவுட்டில் அடிவாரத்தை பலப்படுத்தும் அட்லீ

-

- Advertisement -
கோலிவுட் திரையுலகில் ஆர்யா – நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் வழியாக கோலிவுட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அட்லீ இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு இருவரின் கூட்டணியிலும் தெறி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் மீண்டும் விஜய்யுடன் அட்லீ மற்றொரு படத்தை இயக்கினார்.

2017-ம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கும் அட்லீ என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அட்லீயை இந்திய இயக்குநர்களுக்கு மத்தியில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாற்றியது.

இதனால் உற்சாகத்தில் உள்ள இயக்குநர் அட்லீ, சமீபத்தில் மும்பையில் வீடு ஒன்றை வாங்கினார். இந்நிலையில், பாலிவுட்டில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள அட்லீ, மும்பையில் 40 கோடி ரூபாய் செலவில், 10 ஆயிரம் சதுர அடியில் புதிய அலுவலகம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

MUST READ