Homeசெய்திகள்சினிமாஇளையராஜா கேட்காமலேயே இழப்பீடு தர வேண்டும்..... அட்டகத்தி தினேஷ் கருத்து!

இளையராஜா கேட்காமலேயே இழப்பீடு தர வேண்டும்….. அட்டகத்தி தினேஷ் கருத்து!

-

- Advertisement -

இசைஞானி இளையராஜா திரைத்துறையில் தனித்துவமான இசையை வழங்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலாட்சி செய்து வருகிறார். இளையராஜா கேட்காமலேயே இழப்பீடு தர வேண்டும்..... அட்டகத்தி தினேஷ் கருத்து!அவருடைய பாடல்கள் அன்று முதல் இன்று வரை அனைத்து தலைமுறைகளும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. எனவே பண்டிகை என்றாலும் சரி, திருவிழா என்றாலும் சரி அங்கு இளையராஜாவின் பாட்டு இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த வகையில் தற்போது பழைய பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது ட்ரெண்டாகி வரும் நிலையில், இளையராஜாவின் பழைய பாடல்கள் புதிய படங்களில் இடம்பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான மூன்று பாடல்கள் இடம்பெற்று இருந்தது. இந்த மூன்று பாடல்களும் இளையராஜாவிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இளையராஜா குற்றம் சாட்டியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸும் அனுப்பி இருந்தார். அதற்கு முன்னதாக கூலி, மஞ்சும்மெல் பாய்ஸ் போன்ற படக்குழுவுக்கும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் நெட்டிசன்கள் பலரும் இளையராஜா பணத்தாசையால் தான் இப்படி செய்கிறார்? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் திரைப் பிரபலங்கள் சிலர், இளையராஜாவிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.இளையராஜா கேட்காமலேயே இழப்பீடு தர வேண்டும்..... அட்டகத்தி தினேஷ் கருத்து! அந்த வகையில் தற்போது அட்டகத்தி தினேஷ், இளையராஜா கேட்காமலேயே இழப்பீடு தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அதாவது சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற மாநில சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அட்டகத்தி தினேஷ், “இளையராஜா சார் இழப்பீடு கேட்டது தார்மீகத்தின் படியும், தர்மத்தின் படியும் மிகவும் சரியான விஷயம் தான். அதை நாம் கேட்காமலேயே தர வேண்டும். ராஜா சார் அதைக் கேட்கிற மாதிரி நம்ம வச்சிக்க கூடாது” என்று தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.

MUST READ