- Advertisement -
ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் வெளியாவது இன்று வழக்கமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே ஒரே நாளில் 4 வெளியாகின்றன. பொங்கலை முன்னிட்டு டாப் நடிகர்களின் படங்கள் போட்டிக்கு போட்டியாக திரையில் வெளியாகின. அந்த வகையில் ப்ளூ ஸ்டார் திரைப்படமும், சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் ஒரே நாளில் நாளை வெளியாகின்றன.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு. இதில் அசோக் செல்வன் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார். எஸ்ஜெயக்குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். பா ரஞ்சித் தயாரித்து உள்ளார்.




