- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டா மீது கதை திருட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கில் உச்சம் தொட்ட விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதைத் தொடர்ந்து இந்தியில் லைகர் என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமும் ஆனார். தற்போது விஜய் நடிப்பில் பேமிலி ஸ்டார் திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுக்கு ஆனந்த் தேவரகொண்டா என்ற தம்பி உள்ளது. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தொரசாணி என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.
