Homeசெய்திகள்சினிமாகாசோலை மோசடி வழக்கு... பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது...

காசோலை மோசடி வழக்கு… பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது…

-

- Advertisement -
காசோலை மோசடி வழக்கில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

கோலிவுட் சினிமாவில் பிரபலம் ஆனவர் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். இவர் நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கோலிவுட்டில் காதல் கோட்டை, வெற்றிக்கொடி கட்டு உள்பட முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்படங்களை இவர் தயாரித்து உள்ளார். இது தவிர தெலுங்கிலும் அவர் பல படங்களை தயாரித்து இருக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த திரைப்படத்திற்காக அவர் ஒரு நிறுவனத்திடமிருந்து சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு காசோலை கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த காசோலை கணக்கில் பணம் இல்லாத காரணத்தால், திரும்பிவிட்டது.

இதைத்தொடர்ந்து அந்நிறுவனம் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு கால அவகாசம் வழங்கியது. ஆனாலும், அவர் பணத்தை கொடுக்க முன்வராமல் தாமதப்படுத்தினார். இதனால், பாண்டியனை கைது செய்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை கைது செய்தனர். தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ