- Advertisement -
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியானது. நவம்பர் 10ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா, இளவரசு, நிமிஷா விஜயன், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். சினிமாவில் நடிக்க ஆசைப்படும் ரவுடியாக ராகரா லாரன்ஸூம், இயக்குநராக எஸ்ஜே சூர்யாவும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமாகும்.

இத்திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றன. ஜப்பான் படத்தின் தோல்வியால், இப்படத்தின் முதல் நாள் வசூல் அடுத்தடுத்து அதிகரிக்கத் தொடங்கின. உலக அளவில் ஜிகர்தண்டா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியானது. பிரபல நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.




