Homeசெய்திகள்சினிமாவிஜய் பட நடிகைக்கு கொலை மிரட்டல்... நடந்தது என்ன?

விஜய் பட நடிகைக்கு கொலை மிரட்டல்… நடந்தது என்ன?

-

விஜய் பட நடிகைக்கு கொலை மிரட்டல் வந்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோலிவுட் மட்டுமன்றி பாலிவுட், டோலிவுட் என தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் பூஜா ஹெக்டே . தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான பூஜாவுக்கு தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இவர் சமீபத்தில் நடித்த ராதே ஷ்யாம், ஆச்சார்யா, கிசி கா பாய் கிசி கி ஜான், உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூஜா ஹெக்டே, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் குண்டூர் காரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினாலும், அதனால் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனையாலும் குண்டூர் காரம் படத்திலிருந்து வெளியேறினார்.

தமிழில் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். அதன் பின் பூஜா இந்தியில் ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ என்ற படத்தில் நடித்தார். தமிழில் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக் தான் அது. அந்தப் படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் பூஜா அண்மையில் துபாய்க்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது, ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பாதியிலேயே இந்தியாவுக்கு வந்துவிட்டார். அதன்பிறகு பூஜா ஹெக்டேவுக்கு சில நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக செய்தி வெளியானது. ஆனால், தற்போது பூஜா ஹெக்டே தரப்பு இது வரும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளது.

MUST READ