- Advertisement -
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியாக ₹15 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ‘டிமான்டி காலனி 2′ திரைப்படக்குழு வழங்கியது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. 2015-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் எதிர்பார்க்காத வகையில் வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.


முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். அருள்நிதி நாயகனாக நடித்துள்ள நிலையில், பிரியா பவானிசங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். சாம் சிஎஸ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடி்பபு கடந்த ஆண்டு தொடங்கியது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, நேற்று படத்தின் முன்னோட்டமும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.



