கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் ப. பாண்டி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, மடோனா உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். தனுஷும் இதில் கேமியா ரோலில் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தனுஷ் 5 வருடங்கள் கழித்து தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வடசென்னை பகுதியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மாஸ் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் D50 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி எனவும், சன் பிக்சர்ஸ் மற்றும் கலாநிதி மாறனுக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். எனவே D50 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#D50 #DD2wrapped. My sincere thanks to the entire crew and cast. Also a big thanks to Kalanithi Maran sir and Sun Pictures for supporting my vision.
— Dhanush (@dhanushkraja) December 14, 2023

தனுஷ் விரைவில் தனது அக்கா மகனை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.