spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅப்பாவின் முதல் படம் வெளியான அதே நாளில் மகனின் முதல் படம்.... வெற்றிக்கொடி நாட்டுவாரா துருவ்...

அப்பாவின் முதல் படம் வெளியான அதே நாளில் மகனின் முதல் படம்…. வெற்றிக்கொடி நாட்டுவாரா துருவ் விக்ரம்?

-

- Advertisement -

அப்பாவின் முதல் படம் வெளியான அதே நாளில் மகனின் முதல் படம்.... வெற்றிக்கொடி நாட்டுவாரா துருவ் விக்ரம்?தமிழ் சினிமாவில் சியான் என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விக்ரம். இவருடைய மகன்தான் துருவ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மகான் திரைப்படத்தில் தனது அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அடுத்தது பைசன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க பா.ரஞ்சித் இதனை தயாரித்துள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. அப்பாவின் முதல் படம் வெளியான அதே நாளில் மகனின் முதல் படம்.... வெற்றிக்கொடி நாட்டுவாரா துருவ் விக்ரம்?அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை இந்த படத்தில் வேறொரு பரிமாணத்தில் காட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது துருவ் விக்ரமுக்கு ஆதித்ய வர்மா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மகான் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டாலும் அந்த படம் விக்ரமின் படமாக தான் கருதப்படுகிறது. எனவே பைசன் படம் துருவ் விக்ரமுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தித் தருமா? அவருடைய சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமையுமா? என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.அப்பாவின் முதல் படம் வெளியான அதே நாளில் மகனின் முதல் படம்.... வெற்றிக்கொடி நாட்டுவாரா துருவ் விக்ரம்? இதேபோல் துருவ் விக்ரமும், மகான் படத்தின் போதே தன்னுடைய முதல் படமான ஆதித்ய வர்மா படம் ரீமேக் படம் என்பதாலும், மகான் படம் தன்னுடைய அப்பாவின் படம் என்பதாலும் தனது அடுத்த படத்தை தான் முதல் படமாக எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். அதுபோல சமீபத்திலும் பைசன் படத்தை தான் தன்னுடைய முதல் படம் எனக் கூறியுள்ளார். ஆகவே துருவ் விக்ரமை பொறுத்தவரையில் பைசன் திரைப்படம் தான் அவருடைய முதல் படமாக பார்க்கப்படுகிறது. அப்பாவின் முதல் படம் வெளியான அதே நாளில் மகனின் முதல் படம்.... வெற்றிக்கொடி நாட்டுவாரா துருவ் விக்ரம்?இந்நிலையில் சியான் விக்ரம், ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் கடந்த 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்றுதான் திரைக்கு கொண்டுவரப்பட்டது. அதுபோல கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து விக்ரமின் மகன் துருவின் முதல் படமான ‘பைசன்’ திரைப்படமும் அக்டோபர் 17 திரையிடப்பட இருப்பது ஒரு கோ- இன்சிடென்ட்டாக மட்டுமல்லாமல் துருவ் விக்ரமுக்கு இது அதிர்ஷ்டமாகவும் அமையும் என நம்பப்படுகிறது. அப்பாவின் முதல் படம் வெளியான அதே நாளில் மகனின் முதல் படம்.... வெற்றிக்கொடி நாட்டுவாரா துருவ் விக்ரம்?ஏனென்றால் நடிகர் விக்ரம் தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்காகவும் தன்னை மெழுகாய் உருக்கி நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருவார். அதனால்தான் அவர் இப்போது புகழின் உச்சியில் நிற்கிறார். எனவே அவருடைய மகன் துருவ் விக்ரமும் பைசன் படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்திருப்பதால் அக்டோபர் 17 என்ற நாள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ