இயக்குனர் அமீர், திரு. மாணிக்கம் படத்தை பாராட்டியுள்ளார்.
சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் திரு. மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து பாரதிராஜா, அனன்யா, வடிவுக்கரசி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் நிலையில் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். எம் சுகுமார் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். எமோஷனல் கலந்த திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. அதன்படி மனிதநேயத்துடன் நேர்மையாக வாழ வேண்டும் என்பதை அழுத்தமாக கூறியிருந்தது இந்த திரு. மாணிக்கம் திரைப்படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தை ஏற்கனவே சிவகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டி இருக்கும் நிலையில் தற்போது இயக்குனரும் நடிகருமான அமீரும் பாராட்டியுள்ளார். அதன்படி அமீர், “தூதர் முகமது நபி அவர்கள் கூறினார்கள். ஒரு காலம் வரும். அப்போது சத்தியத்தை பேசுகிறவர்கள் உள்ளங்கையில் நெருப்புத் துண்டை வைத்திருப்பதற்கு சமம் என்று. அதேபோல் இன்றைய காலத்தில் எளிய மனிதர்கள் வறுமையிலும் நேர்மையாக வாழ்வது என்பது அரிதிலும் அரிதானதாகவே மாறி வருகிறது. உண்மையில் எல்லா மனிதர்களும் நேர்மையும் உண்மையுமாக அறத்தோடு வாழ வேண்டியது அவசியமாகிறது என்பதை உணர்த்தும் படம் தான் திரு. மாணிக்கம். எழுத்தாளர், இயக்குனர் திரு நந்தா பெரியசாமி அவர்களை உளமாற வாழ்த்துகிறேன்” என்று பாராட்டியுள்ளார்.