ஓடிடி என்பது நூலகம் போன்றது… இயக்குநர் மாரி செல்வராஜ்…
- Advertisement -

பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி மாரி செல்வராஜை கோலிவுட்டின் முன்னணி இயக்குநாக நிலை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

மாமன்னன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். மேலும், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, மேலும் சில சிறுவர்களும் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வௌியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பா ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரிடம், ஓடிடி தளங்களால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்துவிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அனைவரின் வீட்டில் சாமி படம் இருந்தாலும், கோயிலுக்கு செல்வதை யாரும் நிறுத்தவில்லை. அதுபோலத்தான், ஓடிடி தளம் என்பது நூலகம் போன்றது. அதனால் தியேட்டர் வியாபாரம் பாதிக்கப்படாது என்றார்.