Homeசெய்திகள்சினிமா“பயம் வந்தால்தான் நடிப்பேன்!” – ‘ஐ அம் கேம்’ விழா மேடையில் துல்கர் சல்மான் பேச்சு!

“பயம் வந்தால்தான் நடிப்பேன்!” – ‘ஐ அம் கேம்’ விழா மேடையில் துல்கர் சல்மான் பேச்சு!

-

- Advertisement -

ஒரு படத்தின் கதையை கேட்கும்பொழுது அந்த கதாபாத்திரத்தை எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் வந்தால்தான் அந்த படத்தில் நடிப்பேன் – துல்கர் சல்மான்!

we-r-hiring

மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவேண்டியது அப்போது மிஸ் ஆகிவிட்டது. ஆனால் இப்போது விஜய் சார் தமிழ்நாட்டின் CM ஆகிவிட்டார்; இனி அவருடன் நடிக்க முடியாது – மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்!

நடிகர்கள் துல்கர் சல்மான், கையாடு லோகர், கதிர், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படம் செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் பேசுகையில், தமிழில் விஜய் சார் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது. தற்போது விஜய் சார் தமிழ்நாட்டின் முதல்வராகிவிட்டார். அதனால் இனிமேல் அவருடன் நடிக்க முடியாது. எனக்கு அஜித் மற்றும் சூர்யா ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

அதனை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஒரு திரைப்படத்தை பார்த்து பிடித்துவிட்டால் அந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள். ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தில் அதிகமான தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இது நேரடியாக உருவாக்கப்பட்ட தமிழ் திரைப்படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும்.

நாங்கள் இதுவரை தயாரித்த திரைப்படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய படம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தைப் போன்று இந்த படத்திலும் நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கும். கதிர் மிகச்சிறந்த நடிகர். நான் அவருடைய ரசிகன். இயக்குநர் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். அவர் எங்களுக்கு ஒரு குருவாக இருந்துள்ளார்.

மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக இருக்கும் ஆண்டனி வர்கீஸ் எங்களுக்காக இந்த திரைப்படத்தில் வந்து நடித்துள்ளார். அவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான். நான் எந்த திரைப்படத்தில் நடித்தாலும், அது உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள். அந்த வகையில் இந்த திரைப்படமும் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு திரைப்படத்தின் கதையை கேட்கும்போது, அந்த கதாபாத்திரத்தை எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டால் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரும். ‘காந்தா’ திரைப்படத்தில் நடிக்கும் போதும் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஏற்று நடிக்கப் போகிறேன் என்ற பயம் இருந்தது. அதேபோன்ற பயம்தான் இந்த திரைப்படத்திலும் இருந்தது. அதனால்தான் இந்த படத்தில் நடித்தேன். எனக்கு ரசிகர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு நல்ல திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

களமிறங்கும் பாலிவுட் ஜாம்பவான்கள்: கரீனா கபூரின் ‘தாயரா’ மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘தி வான்’ திரைப்படங்களால் களைகட்டும் செப்டம்பர் பாக்ஸ் ஆபிஸ்!

MUST READ