போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினா் விசாரணை மேற்க்கொண்டுள்ளனா். அவரது ரத்த பரிசோதனை எடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை. இதில் மேலும் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பது விசாரணை முடிவில் அம்பலமாகியுள்ளது.சென்னை, நுங்கம்பாக்கத்தில் பார் மோதலில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார் உட்பட 9 நபர்கள் நுங்கம்பாக்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்கள். இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் மீது பல மோசடி புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து அந்த புகாா் தொடா்பாகவும் கைது செய்யப்பட்டார். இவரது செல்போன் தொடர்புகளை காவல் துறையினா் ஆய்வு மேற்கொண்ட போது கொக்கைன் போதை பொருள் கடத்தல் நபருடன் தொடர்பிலிருப்பது தெரிய வந்துள்ளது. காவல்துறையினா் பிரசாத்தின் நண்பரான சேலத்தை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மேற்கு ஆப்ரிக்கா கானா நாட்டை சேர்ந்த ஜான் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரசாத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பிரதீப் குமார் கொக்கைன் போதை பொருளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்திடம் சப்ளை செய்வது போல், நடிகர் ஸ்ரீகாந்தும் போதை பொருள் வாங்கியதாக தகவல் வந்துள்ளது. இவா் ரோஜா கூட்டம், நண்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். நடிகர் ஸ்ரீகாந்தை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் போதை பொருள் இல்லாத நிலையில், அவருக்கு சம்மன் கொடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொண்டனர்.பின்னர் மீண்டும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் தான் போதை பொருள் பயன்பாடு குறித்த விவரங்கள் தெரியவரும் என காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப்ரதீப்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், மேலும் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடமும் காவல்துறையினா் விசாரணை மேற்க் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
நெருப்பை மூட்டிய மதுரை! கருகிப்போன பாஜக! ஜோதியில் கலந்த அதிமுக!
