- Advertisement -
மலையாள திரையுலகின் பிரபல கதாசிரியர் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்து இருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மலையாள திரையுலகின் முன்னணி கதாசிரியர்களில் ஒருவர், நிஜாம் ராவுத்தர். இவர் ஜக்காரியாவின் கர்ப்பிணிகள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாசிரியராக மோலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இவர் கேரள மாநில அரசின் விருதுகளை வென்றுள்ளார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும், பாம்பே மிட்டாய், ரேடியோ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கும் இவர் திரைக்கதை எழுதி இருக்கிறார். இவரது ஒரு பாரத சர்க்கார் உல்பனம் என்ற திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் போஸ்டரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு,படம் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்.



