Homeசெய்திகள்சினிமாதனி ஒருவன் 2 படத்தை கையில் எடுத்த மோகன் ராஜா... வெளியானது அப்டேட்...

தனி ஒருவன் 2 படத்தை கையில் எடுத்த மோகன் ராஜா… வெளியானது அப்டேட்…

-

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன் என ஆறு வெற்றிப்படங்களை வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்து வரும் சகோதரர்கள் இயக்குநர் மோகன் ராஜாவும், ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இப்படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மக்கள் மனதில் முத்திரை பதிக்கும் அளவிற்கு அழுத்தமான படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குநர் மோகன் ராஜாவும், சவாலான வேடங்களில் சளைக்காமல் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள நடிகர் ஜெயம் ரவியும் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார்

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சனின் கதாபாத்திரம் அழுத்தமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ