நடிகர் ரஜினி கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது.
அதைத்தொடர்ந்து இவர் ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் தனது 170 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அதே சமயம் ரஜினி தனது போர்ஷனை நிறைவு செய்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் சமீபத்தில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சத்யராஜ் இந்த படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -


