உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜா, மீனாட்சி அம்மனை நேரில் தரிசித்து வழிபாடு செய்தார்.
அமைதியான முறையில் சாமி தரிசனம்
மதுரைக்குத் தனிப்பட்ட முறைப் பயணமாக வந்த இசைஞானி இளையராஜா, இன்று காலை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார்.

கோயில் நிர்வாகம் மற்றும் பூசாரிகள் சார்பில் அவருக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்குச் சென்று சிறப்பு அர்ச்சனைகள் செய்து, மனமுருகிச் சாமி தரிசனம் செய்தார். கோயில் அர்ச்சகர்கள் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர்.
ரசிகர்கள் உற்சாகம் – இசைஞானி இளையராஜா கோயிலுக்கு வருகை தந்த தகவலையறிந்து, அங்கிருந்த பக்தர்களும் ரசிகர்களும் அவரைப் பார்க்க திரண்டனர்.
தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த இளையராஜா, அங்கிருந்த ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
மறைந்த இசைக்கலைஞர் ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியீடு!
