ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ ஷூட் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து நெல்சன், ஜெயிலர் 2 திரைப்படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ரஜினி தனது 171 வது படமான கூலி திரைப்படத்தை முடித்த பின்னர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பினை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே தற்போது ஈவிபி பிலிம் சிட்டியில் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் வருகின்ற சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு தரமான சம்பவம் காத்திருக்கு என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.